மழையும் தேநீரும்

பெய்தது மழையோ??
அறியவில்லை,
அருகில் இருக்கும் அவளை கண்டு!
ஒரு கோப்பை தேனீருடன்...
ஒரு சில நேரம்...
ஏதேதோ சொல்கிறாள்!
ஒரு வார்த்தை கூட பேசாமல் நான்...
மறுவார்த்தை ஏன் என்று கேட்காமல் அருகில் அவள்...!
சாரல் மழையின் காதலில்
அவள் நனைய...
இவளது கடலில் மூழ்கிவிட்டேன்
போலும்...!
அட...,
தேனீர் சுவையையும் மறக்கடித்து விட்டாள்...
என்பதை,
தேகம் பட்ட பின்பே அறிந்து
கொள்ள வேண்டியநிலை!
இருக்கட்டும்...
மழையின் காதலில் அவள் நனைய....
அவளது காதலில் தேநீருடன் குளிர்காய்கையில்...
அதுவும் வாழ்க்கையில் நான் கண்ட சுகம் என்று.

எழுதியவர் : தியா (10-Jun-20, 7:19 pm)
சேர்த்தது : DHIYA
பார்வை : 716

மேலே