திருத்தொண்டர் வெண்பா மாலை பகுதி 2

மதுரகவியார் பெருமை

செவிக்கினிய பாடல் தெளிவுறவே பாடிப்
புவிக்கருளி நன்மை புரிந்தார் - அவியாத
ஞானஞ்சேர் மாறனடி நாடும் மதுரகவி
வானத்தார் சூடும் மணி.

ஆண்டாள் பெருமை

வையம் விழிக்க மணிவிளக்காம் நற்பாவை
உய்ய உலகுக் குவந்தளித்தாள் - பொய்யற்ற
காதலால் நெஞ்சம் கசிந்துருக வைத்திடுமே
கோதை கொடுத்தத் தமிழ்.

பெரியாழ்வார் பெருமை

மாலிருஞ் சோலை மலைக்காட்டின் பேரழகும்
கோலக் குழலோசைப் பாட்டழகும் - மாலழகும்
பிள்ளைத் தமிழ்மணக்கப் பாடும் பெரியாழ்வார்
உள்ளம் உருக்கும் கவி.

எழுதியவர் : இமயவரம்பன் (18-Jun-20, 7:57 am)
சேர்த்தது : இமயவரம்பன்
பார்வை : 167

மேலே