இதயத்தை தருவாளா

இரட்ட சடை
போட்ட குட்டி
தட்டுவடை விக்கிறாளாம்
கட்டுக்கட்டா
பணத்தை நீ போடுடா
அவள் ‌
கடைக்கண் பார்வையை
நீ கேளுடா !

சந்தன பொட்டு வச்சி
ஜரிகை பட்டு உடுத்தி
கை வீசி நடப்பதையே
பாரடா .
அவள் அன்ன நடை போடுவது
ஏனடா ?

கண்ணாலே மின்னலேயே
என் மனசில் பாய விட்டு
இடி இடிக்க
வைத்துவிட்டால் பாரடா!
அவள்
இதயத்தை தருவாளா?
கேளடா.

எழுதியவர் : சு.இராமஜோதி (18-Jun-20, 1:42 pm)
சேர்த்தது : ராமஜோதி சு
பார்வை : 135

மேலே