ஒளியானது அன்பு

காதலுக்காக ஏக்கம்
காதல் வரும் வயதில்
அதில் பாதி பருவம்
கரைந்து விடும் அச்சத்தில்
மீதி பருவ காலத்தில்
காதலுக்கு எண்ணம் மட்டும்
பச்சைக் கொடி காட்டும்,
ஆனாலும்
திக் திக் நிமிடங்கள் பல,
ஏதோ கள்ள குணம் உள்ளத்தில்
இந்தக் காதல் வரவே வேண்டாம்
சும்மா அழகாக நகர்ந்து
செல்ல வேண்டிய நாட்களெல்லாம்
அச்சத்துடன் நகர்கின்றன
நேரிய வழியில் நம் எண்ணம்
நிலை தடுமாறாது வாழ
நம் அழகிய வாழ்வின் துடுப்பு
நம் கையிலே, காதலும் நம் வசமே
காதல் புனிதமானது
களவாடும் பொருள் அல்ல ,
நிஜமானது உலகில்
உண்மைக் காதல் ஒன்றே .
எவ்வுயிர்க்கும் இந்த அன்பு ஒளியானது

எழுதியவர் : பாத்திமாமலர் (23-Jun-20, 12:28 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 305

மேலே