பத்தோடு பாதுகாப்பாக

பத்துவகை உயிர் காக்கும் உணர்வுகள்மிகாமலும்
ஒன்பது வாசல் மனித துவாரங்களை பாதுகாத்தும்
எட்டு வகை இயற்கைத் திக்குகளின் அரவணைப்பில்
ஏழு வகை ஒலி அளவுகளை சரிவிகிதத்தில் கேட்டும்
அறுவகை சுவைகளை அளவோடு உட்கொண்டும்
ஐம்பூதங்களையும் அதனதன் இயற்கையோடு புசித்து
நான்கு வகை மார்க்கங்களைப் பின்பற்றியும்
முக்காலத்தின் முக்கியத்தியத்தை உணர்ந்தும்
இரண்டு நிலைகளில் முடிவு கொண்ட வாழ்க்கையில்
ஒற்றை உயிருடன் உத்தம உடலோடு வாழ்வது அரிதே.
------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (23-Jun-20, 5:47 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 57

மேலே