விழியின் கதவு திறந்தால் விடியல்

விழியின் கதவுஇமை நீதிறந்தால் விடியல்
மொழியின் கதவிதழ் நீதிறந்தால் பூங்கவிதை
நெஞ்சக் கதவைத்தா ளிட்டுவைப் தேனோ
கொஞ்சம் திறஉள்ளே வருவேன் நான்

-----இயல்பான பா


விழியின் கதவு திறந்தால் விடியல்
மொழியின் கதவிதழ் நீதிறந்தால் பூங்கவிதை
நெஞ்சக் கதவைத்தா ளிட்டுவைப் தேனோசொல்
கொஞ்சம் திறவருவேன் நான் !

-----இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (25-Jun-20, 10:12 am)
பார்வை : 104

மேலே