மாறலாம்

கையிலெடுத்த காகிதம்
கற்பனையோடு கூட்டு சேரும்
கவிதை, காவியம் படைக்கும்
கல்விக்கு பெருமை சேர்க்கும்
கல்விக்கூடத்திலும், நூலகத்திலும்
கம்பீரமாய் வந்து அமரும்

கடைகளுக்கு வந்து விடும்
காகிதமோ பொருட்களை
கட்டிக் கொடுக்க உதவியும்
கண்டுகொள்ளாத மனிதர்கள்
காரியம் முடிந்ததும் தூக்கிக்
குப்பை தொட்டியில் வீசுவார்கள்

கற்றோர் கைகளிலும்
கற்போர் கைகளிலும்
காகிதமே நீ இருந்து
கல்விக்கு அழகு சேர்த்திடு,
கைவிடமாட்டார்கள் உன்னை
கரண்சியாகக்கூட நீ மாறலாம்

எழுதியவர் : கோ. கணபதி. (26-Jun-20, 7:22 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : maralaam
பார்வை : 50

மேலே