வாழ்ந்ததில் அர்த்தமிருப்பதால்

மண்ணில் வந்துதித்த மனிதனுக்கு
மனதில் ஒரு நோக்கம் வேண்டும்
அது அடுத்தவர்களின் வாழ்வுக்கு
பயனளித்தால்,
அப்படிபட்ட ஒருவரின் வாழ்க்கை
அர்த்தமுடையதாய் அமையும்

வாழும் வாழ்க்கையில் பணமும்
வெற்றியும் தான் உயர்வு தந்து
மகிழ்வைத் தருமென எண்ணி
மனம் கெட்டு பேராசையால்
வஞ்சகத்தால் பொருளீட்டி
வாழ்வதில் அர்த்தமுண்டா ?

தேனீயுடைய எச்சில் தேன்
பட்டு பூச்சியின் எச்சில் பட்டு
பாரிலுள்ளோர்க்கு பயன்படும்
இந்த இரு பொருளால்
அந்த பூச்சிகளின் வாழ்விலும்
உன்னத நோக்கம் இருக்குமோ ?—அவைகள்
வாழ்ந்ததில் அர்த்தமிருப்பதால்.

எழுதியவர் : கோ. கணபதி. (26-Jun-20, 7:25 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 44

மேலே