நான் ஒரு கேள்விக்குறி

ஏன் ? எப்படி? எதற்காக? எப்பொழுது? எங்கே? என்பேனோ
அப்படியா? அதுவா? இதுவா? என்னவோ? என்று எத்தனிப்பேனோ
விடை வேண்டி நன் கேட்கவில்லையே
வேடிக்கையும் நன் செய்யவில்லையே
விடை உண்டு என்னிடம் ஆனால் விவரம் இல்லாமல் போனதே
தெளிவு நானும் கண்டிட பல கேள்வி கனலை தொடுகிறேன்
அதட்டி நீயும் போகிறாய், விளக்கம் தேடி அலைகிறேன்
விரியும் எந்தன் கண்களில் வினாக்கள் பல எழுகையில்
தடுக்க நானும் நினைக்கிறன் ஆனால்
கரை உடைக்கும் காவேரியாய் கரை புரண்டு ஓடுதே
எண்ணில் பல கேள்வி எழுகையில் நானும் கேள்வியாய் ஆகிறேன்
விடை தெரியா வாழ்வில் விடை இல்லா கேள்விகளுடன்
நிலவை பார்க்கும் நான் ஒரு கேள்விக்குறி?

எழுதியவர் : ஹேமாவதி (26-Jun-20, 10:29 am)
சேர்த்தது : hemavathi
பார்வை : 212

மேலே