நல்ல தமிழ் கதைகள்

தொட்டிலில் தனித்திருந்த குழந்தை
தொட்டிலுக்குள் எப்படியோ வந்த நாகம்
நாகத்தைக் கண்டுகொண்ட கீரிப்பிள்ளை
பிள்ளையை நாகம் தீண்டும் முன் நாகத்தை
தீர்த்துக்கட்டிய கீறி வாயில் ரத்தம்
அப்போது அங்குவந்து சேர்ந்த குழந்தையின் தாய்
கையில் ஏந்திய அரிவாளால் கீரியை வெட்டிவீழ்த்தி
தொட்டிலில் கிடத்திய குழந்தையைத்தேடி ஓட
சிரித்து விளையாடும் குழந்தையைக் கண்டாள்
அதன் தொட்டிலில் கீழே துண்டாகிடந்த நாகப்பாம்பு
நடந்தது தாய்க்கு புரிந்தது இப்போது காலம் கடந்து

கதை என்னவோ பழையது ..... படிப்பினை

'ஆத்திரம் அறிவை மாய்க்கும் '
இன்றும் என்றும் இக்கதை
நல்லதை போதிக்கும்
உலகு உள்ளவரை
நாம் இதை மறக்கலாகுமா
போதிப்போம் நம் பிள்ளைகளுக்கு

தமிழில் இல்லாததும் உண்டா .....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-Jun-20, 9:20 pm)
பார்வை : 128

மேலே