தூரமாகவே நின்று போ 💘

இரவெல்லாம்
கண்விழித்து...நான்
எழுதிய கவிதையெல்லாம்...
மறுநாள் உனைப் பார்க்கையில்...
மதிப்பிழந்து போகிறது.!!

என்ன செய்வேன்…?!?

வார்த்தைகளில்
வடிக்க முடியா...
வண்ணக் கவிதை நீ.!!

இப்போதெல்லாம்...
வேண்டுமென்றே நான்...
கதவடைக்க மறந்துபோகிறேன்,
உன்னை தொட்டுவரும்
காற்றை...
உள்வாங்கி கொள்வதற்கு.!!

எத்தனைமுறை நீ
திட்டினாலும்...
வெட்கம் கெட்ட மனதிது,
ஒரு நாய்க்குட்டி போல் - உன்
பின்னேதான் செல்கிறது.!!

நிழலின் துணையின்றி
நீள்கிறது நாட்கள்...
உடன் வரும் காற்று
உளறி கொண்டே - என்
கைபிடித்துக் கதைகிறது.!!

பகலும் இரவும்...
பருவங்களும் ஆண்டுகளும்...
மிக மெதுவாய் நகர..
பைத்தியமாய் இதயம் - உனைப்
பார்க்க ஏங்கி நிற்கும்.

வலியது... வலி இது..!!
உயிரில் வலிக்கும்..!!
உனக்கிது வேண்டாம்.!!

எப்போதும் போல் நீ...
தூரமாகவே -
நின்று விட்டுச்செல்.!!

💐💐💐💐💐💐💐💐

எழுதியவர் : மருத கருப்பு (29-Jun-20, 2:20 pm)
சேர்த்தது : மருத கருப்பு
பார்வை : 335

மேலே