உன் கனத்த மௌனம்

உன் கனத்த மௌனம்
என் செவிப்பறையை அதிர்விக்கிறது...

கண்ணுக்குப் புலப்படா நூலிழை இடைவெளி ...
தகர்க்க முனைந்து தடுக்கி விழுகின்றேன்.....

நினைவுத் தூறலில் ஊறி
இதய இலவம் கனமாகி...
நெஞ்சகக் கூடு விரிசலிடுகிறது....

பிரவேசம் அறியாது
பிரிவும் அறியாது
காற்றாய் தடமின்றி
என்னுள்ளே வலம்வந்து இம்சிக்கின்றாய்

காலச் சக்கரத்தை தொற்றியே நகர்கிறேன்....
உயிரின் உரசலில் உதிரம் கசியக் கசிய....

உதிர்நிலையில் ஒட்டிய இலையாய் காத்திருக்கிறேன்....
உணர்பசிகள் தூர்ந்த பாலையாய் ஜீவிக்கிறேன்....

எழுதியவர் : வை.அமுதா (30-Jun-20, 11:20 am)
Tanglish : un kanaththa mounam
பார்வை : 207

மேலே