விழிப்பு

நாளைக் காலையில்,
சீக்கிரமாய் எழ வேண்டும்.
எப்போதும் போல்...
பல் துலக்கி, குளித்து,
தலை சீவி, துணி மாற்றி,
அலுவலகம் சென்று,
வேலை செய்வதாகப் பேர்செய்து, - மறுபடி
மாலை அறை அடைந்து,
நானே சமைத்து,
நானே உண்டு,
நானே கழுவி, நானே துடைத்து,
மிஞ்சிய பொழுதுகளில்,
கவிதை எழுத முயன்று,
பின்...
எல்லாம் முடித்து, சிறிது
ஏகாந்தமாய் இருக்கையிலும்,
உறங்க செல்லும் முன்பும்
வழி மறித்து...
வம்பு செய்யும்...
உன் ஞாபகங்கள்.
பெருதுளிகள் கலந்த
அடைமழை என
அத்தனை இரவையும்
அடக்கி ஆளும்.
வம்படியாய்
கண்களை மூடி காத்திருப்பேன்
மறுபடியும்...
மறுநாள் காலை
சீக்கிரம் எழ...

எழுதியவர் : மருத கருப்பு (30-Jun-20, 3:01 pm)
சேர்த்தது : மருத கருப்பு
Tanglish : vilippu
பார்வை : 312

மேலே