ஆறு மனமே ஆறு

கண்ணதாசன் பாடலொன்று "ஆறு மனமே ஆறு "என்று துவங்கும் . ஆண்டவன் கட்டளை படத்த்தில் இடம் பெற்றது . இந்த பாடலில் அப்படி என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா ? இருக்கிறது , கண்டிப்பாக இருக்கிறது . இந்த பாடலில் எட்டி திருக்குறளை ஒரே பாடலில் கண்ணதாசன் எழுதி உள்ளார் .

பாடலையும் , தொடர்புடைய திருகுறையும் கீழே பார்ப்போம் .

பாடல் :

ஆறு மனமே ஆறு அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும்
வகைக்கு தெய்வத்தின்
கட்டளை ஆறு

ஒன்றே சொல்வார் ஒன்றே
செய்வார் உள்ளத்தில்
உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம்
துன்பத்தில் இன்பம்
இறைவன் அமைத்த நியதி

சொல்லுக்கு செய்கை
பொன்னாகும் வரும்
இன்பத்தில் துன்பம் பட்டாகும்
இந்த இரண்டு கட்டளை
அறிந்த மனதில் எல்லா
நன்மையையும் உண்டாகும்

உண்மையை சொல்லி
நன்மையை செய்தால் உலகம்
உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் பொது பணிவு
கொண்டால் உயிர்கள்
உன்னை வணங்கும்

உண்மை என்பது அன்பாகும்
பெரும் பணிவு என்பது பண்பாகும்
இந்த இரண்டு கட்டளை
அறிந்த மனதில் எல்லா
நன்மையையும் உண்டாகும்

ஆசை, கோபம் களவு
கொள்பவன் பேச தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன்
மனித உருவில் தெய்வம்

இதில் மிருகம் என்பது கள்ள
மனம் உயர் தெய்வம் என்பது
பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த
மனது ஆண்டவன் வாழும்
வெள்ளை மனம்

மேற்கோள் காட்டப்பட்டுள்ள திருகுறள்கள்

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி

இன்பத்துள் இன்பம் விளையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்

இன்பத்தில் துன்பம் , துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்கு தன்சொலால்
தான்கண் டனைத்து இவ்வுலகு

உணமையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உயிரிகள் உன்னை வணங்கும்

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மானப் பெரிது

நிலைத்த திரியும் போது பணிவு கொண்டால் உலகம் உன்னிடம் மயங்கும்

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்காறு இயன்றது அறம்

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

கண்ணோட்ட மென்னும் கழிபெறும் காரிகை
உண்மையா னுண்டிவ் வுலகு

அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் .

கண்ணதாசன் -- தனது பாடல்களில் திருக்குறளையும் எளிய முறையில் பயன்படுத்தி இருக்கிறார் என்பது தெளிவு . இறைவன் தமிழ் மொழிக்கு அளித்த ஈடிணையில்லாக் கவிஞன் .

எழுதியவர் : வசிகரன்.க (30-Jun-20, 3:25 pm)
Tanglish : aaru maname aaru
பார்வை : 106

சிறந்த கட்டுரைகள்

மேலே