துளி துளிகள்

விழிகளின் ஓரத்தில் வழிவதற்கு
காத்திருக்கும் நீர்
எதற்காகவோ ?

புலியொன்று
கடந்து போக
மெளனத்தின்
சப்தத்தில் அந்த
காடு

அவள் தலையில்
சூடியிருந்த
மல்லிகை பூவுக்கு
சந்தேகம் வந்து விட்டது தன் மணம் அவன் மனதை மயக்கவில்லையோ ?

எழுதியவர் : தாமோதரன். (30-Jun-20, 10:47 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 97

மேலே