விண்மீனாய் முத்தம் பதித்தவளே 555

உயிரானவளே...


எத்தனை இரவுகள் நீயும்
நானும்
ரசித்து இருப்போம்...

அந்த
விண்மீன்களை...

இன்று மட்டும் ஏனோ
எண்ணிலடங்கா விண்மீன்கள்...

நானும் ரசிக்கிறேன் நீயும்
ரசித்து கொண்டுதான் இருப்பாய்...

நான் உன் நினைவுகளை
சுமந்து
கொண்டு ரசிக்கிறேன்...

நீயும் உன்
துணையோடு
இருப்பாய்...

உனக்கு நினைவிருக்கா...

அந்த ஒற்றை
விண்மீனை
காட்டிவிட்டு...

என் கன்னத்தில்

முத்தம் வைத்தாயே...

உனக்குள் அந்த
நினைவு வந்தால்...

இனி வரக்கூடாது என்று
நினைத்துக்கொள் உன் வாழ்வில்...

என்றும் உன் நலம்
விரும்பும் ஜித்தன்.....



எழுதியவர் : முதல் பூ பெ.மணி (2-Jul-20, 9:35 pm)
பார்வை : 437

மேலே