இயற்கை
ஆடும் மயிலின் நீல வண்ண கழுத்து
ஓடும் மானின் உடம்பின் புள்ளிகள்
கலை மானின் கண்கள் கிளைக்கொம்பு
சோலைக்குயில் பாட்டு கொஞ்சும் மாடப்புறா
தடாகத்தி லிருந்து வெளிவந்த அன்னத்தின்
அந்த அழகுநடை கொஞ்சும் மைனாக்கள்
புல்வெளியில் பூத்துக்குலுங்கும் சாமந்தி
இரவில் நீலவானில் உலாவும் முழுநிலவு
மின்னும் தாரகைகளை மண்ணில் காட்டும்
தடாகத்தின் தெளிந்த படிக நீரென
இவை அத்தனையும் இன்னும் எத்தனையோ
இயற்கையில் எனக்கு இறைவனைக் காட்டுகிறது