இவளுக்கு உதவ மலர்களைப் பறிக்கலாம் என்று ஸ்பரிசிக்கச் சென்றேன்

அதிகாலை விடியல்
வைகறைப் பொழுதின் மௌனம்
வண்டுகள் இன்னும் துயில் கலையவில்லை
இவளும் இன்னும் துயில் கலைந்து வரவில்லை
இவளுக்கு உதவ
மலர்களைப் பறிக்கலாம் என்று ஸ்பரிசிக்கச் சென்றேன்
தொடாதே ...அனுமதி இல்லை
அவள் வந்தே பறித்துக் கொள்ளட்டும்.... காத்திருப்போம்
என்று கோரஸில் சொல்லின மலர்களெல்லாம் !

நீரூற்றிய எனக்கு இல்லையா உரிமை பறிக்க
மலர்களின் மேல் இவளுக்குள்ள ஆளுமை ...
சற்று பொறாமையாகத்தான் இருந்தது !

எழுதியவர் : கவின் சாரலன் (3-Jul-20, 7:38 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 40

மேலே