காமம்காதல் வாழ்க்கை

நாடி அடைந்து
ஓடியாடி பாடி
கட்டியணைத்து முத்தம்தந்து
கலந்து கசிந்துருகி
காமத்தில் கழித்த
காலம் போய்
மெல்ல விழித்தேன்
அகக்கண் திறக்க

இதோ என்னருகே
அதே என்னவள்
அன்பு பொழிந்து பிள்ளைகளைப் பேணி
வளர்த்து ஆளாக்கி
என்னையும் தாய்போல்
அன்பாய் ஆதரவாய்
கொஞ்சமும் முகம்
கோணாது பணிபுரிய
இதுவே நான்
உனக்கு காட்டும்
காதல் என்று
உணர்த்தாமல் உனதிகொண்டிருக்கிறாள்

காமம்வேறு காதல்வேறு
காதல் அன்பு
அன்பே காதல்
குருவாய் புகட்டினால்
காதல் வேதம்
என்னவள் எந்தன்
இல்லது அரசி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Jul-20, 12:54 pm)
பார்வை : 105

மேலே