காதல்

கனவில் வந்தாள்
கனவுலகு காரிகையாய்
மின்னும் நவரத்தினம்போல்
மேனி ஒளிர்ந்திட
அங்கமெல்லாம் அழகு
ஆபரணமாய்த் துலங்க
ஓராயிரம் கவிதைப்பேசும்
கண்களால் என்னை
என்மனதை சுண்டியிழுத்தாள்........
கண்விழித்தேன் ..... இன்னும்
ஏன் உறங்கவில்லையோ
நான் என்று
என்னையே நொந்துகொண்டேன்

காரணம் கனவு கலைந்தது
கனவுகன்னிகையும் காணாது
போனாளே.... ஆனால்
மறக்கமுடியாது மனதில்
பதித்து விட்டாளே மனதை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Jul-20, 1:09 pm)
Tanglish : kaadhal
பார்வை : 99

மேலே