பாவம் மத்தளம் ஆனான் அவன்
மத்தம் ஆனான் அவன்
மணமான பின்னே
ஒரு பக்கம் தாய்
தன தாபத்தை ஓங்கி அடிக்க
தாரமோ கட்டிலில் இரவில்
தூங்கும் முன்னே மெல்ல
போதனையாய் அடிக்கிறாள்
வலயப்பட்டி தவில்போல
நடுவில் அவன்
மத்தளமாய் அத்தனை
அடிகளையும் சுமந்து
மனம் கோணாது ...
காலத்தின் தீர்ப்பை நோக்கி