தொட்டுத் தழுவும் தென்றலுக்கு

மல்லிகைச் சந்தையின் நறுமணத்தால்
சாக்கடையின் துர்நாற்றமும் மாறிப்போனது
தொட்டுத் தழுவும் தென்றலுக்கு
சாக்கடையென்றும் மல்லிகையேயென்றும் பேதமில்லை !

மல்லிகைச் சந்தை நறுமணத்தால் ஓடிடும்
சாக்கடையின் துர்நாற்ற மும்மாறிப் போய்விடும்
சாக்கடை மல்லிகை பேதமில்லை தென்றலுக்கு
தொட்டுத் தழுவியேசெல் லும் !

-----இன்னிசை வெண்பாக்க

எழுதியவர் : கவின் சாரலன் (8-Jul-20, 8:29 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 69

மேலே