ஐங்குறுநூறு --- சில தகவல்கள்

ஐங்குறுநூறு -- எட்டுத்தொகை என் வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று .இதில் உள்ள பாடல்கள் சங்ககாலத்தை சேர்ந்தவை . இது மூன்றடி சிற்றெல்லையும் ஆறடி பேரெல்லையும் கொண்டது ஆகும் .ஆசிரியப்பாவால் ஆன இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் . குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் பாலை என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை . ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந்நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன .

ஐங்குறுநூறில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணையைச் சேர்ந்த பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்பட்டுள்ளன . இவற்றை தொகுக்க உதவும் பாடலும் பிரிவுகளும்
மருதத் திணைப் பாடல்கள் 100 -- ஓரம்போகியார்

நெய்தல் திணை பாடல்கள் -- 100 அம்மூவனார்

குறிஞ்சித் திணை பாடல்கள் -- 100 கபிலர்

பாலைத் திணை பாடல்கள் -- 100 --ஓதலாந்தையார்

முல்லைத் திணை பாடல்கள் -- 100 -- புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்

தொகுப்பித்தவர் -- யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை

நூலின் அமைப்பு :

நூறு நூறு பாடல்களாகப் பயின்று வரும் பாடல்களினாலோ அல்லது அப்பாடலைகளில் பயின்று வரும் சொல்லாட்சியினாலோ தனித்தனி பெயர்கள் பெற்றன .
வேட்கைப்பத்து , வேழப்பத்து ,நெய்யோப்பத்து , கள்வன் பத்து போன்றவை சொல்லாட்சியாலும் பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து , தோழி வற்புறுத்தப்பத்து , செவிலி கூற்றுப்பத்து முதலியன பொருளமைப்பாலும்பெயர் பெற்றன . தொண்டிப்பத்து அந்தாதி முறையில் அமைந்துள்ளது . அன்னாய் பத்து ,சொல்லாட்ட்சியும் ,பொருளாட்ச்சையும் பொருந்தியது .

விலங்கு பறவைகளை கருப்பொருளாகக் கொண்டு குரக்குப்பத்து , கேழற்பத்து , மயிற்பத்து , கிள்ளைப்பத்து ஆகிய பெயர்களும் அமைந்துள்ளன . உள்ளுறை , உவமை , இறைச்சி முதலிய நயங்கள் நிறைந்துள்ளன . குறைந்த அளவிலான அடிகளைக் கொண்டிருந்தாலும் இப்பாடல்களில் அகப்பொருளுக்குரிய முதல் , கரு ,உரி ஆகிய மூன்றும் குறைவின்றி அமைந்துள்ளன .

சுவைகளில் எழுதப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த இந்த நூலை பிற்காலத்தில் ழிந்துபோகும் நிலையை எய்தியபோது பல சுவடிகளை சோத்தித்து தற்கால தமிழருக்கு பயன்படும் வகையில் 1903 ஆம் ஆண்டு முதன் முதலாக பதிப்பித்து வெளியிடப்பட்டது .

வாலிழை பாகத்து ஒருவன் என்ற சிவபெருமான் பாடலை கடவுள் வாழ்த்திய பாட்டாக எழுதி சங்ககாலத்திலிருந்து சுமார் 300 ஆண்டுகளுக்கு பின்னர் சேர்க்கப்பட்டது இந்த பாடலை எழுதியவர் பெருந்தேவனார் ஆவார் . உண்மையில் கடவுள் வாழ்த்து பாடல் ஐங்குறுநூறு பாடல் காலத்தில் எழுதப்பட்டதல்ல .

அந்த பாடல் இதோ

நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இரு தான் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே

இந்த பாடல் இறைவனின் விரிவாகத் தன்மையை ஒன்று , இரண்டு மூன்று என்று எண்ணிக்காட்டுகிறது .அவன் ஒருவன் நீலநிரப் பெண்ணைத் தன பாகத்தில் வைத்துக் கொண்டிருப்பவன் . அதனால் அவனுக்கு ஆண் - திருவடி , பெண் - திருவடி என்று இரண்டு திருவடிகள் . இரண்டும் இருவகைத் தாள் (முயற்சி) . இந்த இருவகை முயற்சியினால் மூன்று வகையான உலகங்களும் தோன்றின . அவை மேல், இடை , கீழ் - என்பன மூவகை உலகங்கள் .

நன்றி !

எழுதியவர் : வசிகரன் .க (10-Jul-20, 1:47 pm)
பார்வை : 879

சிறந்த கட்டுரைகள்

மேலே