உருமாறி விடும்

ஆதி என்று ஒன்றிருந்தால்
முடிவு என்று ஒன்று உண்டு
மனித வாழ்வில்
மரணமும் அப்படித்தான்,
இறப்பே இல்லாவிடில்
பிறப்பு ஏது ?—வாழ்க்கையின்
மேலான நெறிமுறைக்கு
மரணம் ஒரு காரணம்

வாழ்க்கையின் பெருமை
வாழும் நாட்களில்லை
செய்து முடிக்கும்
செயலில் தான் உள்ளது ,
மரணம் துன்பங்களிலிருந்து
மனிதர்களை விடுவிக்க
அவர்களை தன் மடியில்
ஏந்திக் கொள்கிறது

கூட்டுக்குள் அடைபட்ட
குருவிக்குக் கிடைக்கும்
விடுதலையைப் போன்றது
மரணம், மனிதர்களுக்கு,
வாழ்க்கையில் வாழ்வதற்கு
வழியில்லாதபோது—மரணம்
கை கொடுக்கும்
கவலைகளை போக்கும்

உடலின் புண்ணுக்கு
உதவும் மருந்து ,
உயிரின் புண்ணுக்கு
மரணம் தான் மருந்து ,
மனித வாழ்வில்
மரணம் இல்லையென்றால்
உலகமே நரகமாக
உருமாறி விடும்

எழுதியவர் : கோ. கணபதி. (11-Jul-20, 9:12 am)
Tanglish : urumaari vidum
பார்வை : 42

மேலே