இன்பமே இன்பமே
கட்டான தேகத்தில் கனியிதழ் தீரத்தில்
முட்டிவந்த மோகத்தில் விட்டுவந்த நாணத்தை
இட்டுவந்த பெண்மயிலை தொட்டுவந்த பூங்காற்றே
தட்டாமல் தழுவாமல் கட்டழகை கடந்துவா
சொட்டுத்தேன் தரும்சுகத்தை பாட்டுந்தான் தருமென்று
காட்டித்தான் உரைப்பாயோ தொட்டுத்தான் கரைப்பாயோ
மட்டிலா ஞானத்தை மட்டும்தான் கொடுப்பாயோ
தொட்டிலாடும் சந்தியிலே தாலாட்டும் படிப்பாயோ
விட்டிலாடும் தீச்சுடரே வீட்டிலாடும் சுடரொளியே பட்டிலாடிப் பயில்வதற்கே பூத்துவந்த புதுமலரே
வட்டவிழி பார்வையிலே மயக்கந்தரும்