சொக்கலிங்க சுகம்
மதுரைச் சொக்கலிங்கப் பெருமானைத் தரிசித்த கவிஞர் அந்த இன்பத்தை வியந்து பாடுகிறார்.
நேரிசை வெண்;பா
காண்டரிய மேனியுமொண் கந்தரமுஞ் சுந்தரனாய்
ஆண்டதுவு மேனிக் கமைந்ததுவும் - நீண்டமுகின்
மைக்கலிங்க மாகமணி மாடமணி மாமதுரைச்
சொக்கலிங்க மென்னுஞ் சுகம். 153
- கவி காளமேகம்
பொருளுரை:
“காணுதற்கும் அரியவான திருமேனியும், ஒளியுடைய செஞ்சடையும், சுந்தரனாக வந்து ஆட்கொண்டதும், மேனி யிடத்தேயே அமைந்ததுவும், எல்லாம் நீண்ட மேகங்களே கருத்து ஆடையாக மேலே விளங்கும் அழகிய மாடங்களையுடைய சிறந்த மதுரைச் சொக்கலிங்கம் என்னும் பேரின்பப் பொருளுக்கே உரியனவாகும்’
சுந்தரம் - மேகம். -