மலர் நெஞ்சில் மதுவருந்தி
விருந்துண்ண வந்த வண்டினை
இதழ் இலை விரித்து வரவேற்றது மதுமலர்
மலர் நெஞ்சில் மதுவருந்தி உறங்கிப் போனது வண்டு !
மண்ணில் உதிர்ந்து விழுந்தது மலர்
உறக்கம் கலைந்த வண்டு வருந்தி
இரங்கல் பா ஒன்று பாடி
கண்ணீரில் பிரியா விடை கொடுத்துப் பறந்தது !