கொரோனாவே

கொரோனாவே....
------------------------------------------------ருத்ரா


நீ வாழ்க!
நீ பரவுவது
மூக்கினாலும் வாயினாலும் தானே.
எங்களுக்கு வந்த காதல் நோய்
போல‌
விழி வழியே பரவினால்
இந்நேரம்
கண்ணில் கவசம் அணிந்து அல்லவா
திரிவார்கள்!
கண்ணின் கவசங்கள் வழியாய்
தினமும் அவளை
நான் எப்படிக்காண்பேன்?
விழிகளும் தூண்டிலுமாய்
எங்கள் விளையாட்டு
என்ன ஆவது?
‍‍‍‍‍‍___________________________________________

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (12-Jul-20, 6:57 pm)
பார்வை : 130

மேலே