சொந்தம் என்ன

கை விடப்பட்ட
உறவுகளுக்கும்
உடைமைகளுக்கும்
உரியவன் சொந்தம்
கொண்டாட
வரும் போது....! !

வேலி போட்டு
பாதுகாத்த
பாதுகாவலனுக்கு
அங்கே என்ன வேலை...?

கட்டிய வேலிகூட
அவனுக்கு அந்நியம்
ஆகிவிடும்...! !

சுழல்கின்றன
கால சக்கரத்தில்
வாயுள்ள ஊமை
நீ....! !
சொந்தம் என்ன....
பந்தம் என்ன...
சொன்னால்
பாவமே....! !

கண்ணதாசன்
பாடல் வரிகள்
காற்றில் வருகிறது...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (13-Jul-20, 9:29 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : sontham yenna
பார்வை : 70

மேலே