சொந்தம் என்ன
கை விடப்பட்ட
உறவுகளுக்கும்
உடைமைகளுக்கும்
உரியவன் சொந்தம்
கொண்டாட
வரும் போது....! !
வேலி போட்டு
பாதுகாத்த
பாதுகாவலனுக்கு
அங்கே என்ன வேலை...?
கட்டிய வேலிகூட
அவனுக்கு அந்நியம்
ஆகிவிடும்...! !
சுழல்கின்றன
கால சக்கரத்தில்
வாயுள்ள ஊமை
நீ....! !
சொந்தம் என்ன....
பந்தம் என்ன...
சொன்னால்
பாவமே....! !
கண்ணதாசன்
பாடல் வரிகள்
காற்றில் வருகிறது...! !
--கோவை சுபா