COMMON RAJA

நல்ல காலத்தில் பிறந்ததால் நல்லவனாய் பிறந்தாய்
நாட்டின் மீதான பற்றால் தம் சுகத்தை மறந்தாய்
அல்லதை யோசிக்காமல் அயராது உழைத்தாய்
அரியதான செயல்களால் அற்புதங்களை படைத்தாய்
உரியவருக்கு உரியதை உளமாறக் கொடுத்தாய்
உரிமையான யாவையயையும் உறுதியுடன் பெற்றாய்
பணம் மீது ஏற்படும் பற்று முழுவதையும் அழித்தாய்
பாமரர் உய்யவே பல வழிகளைக் கண்டாய்
கல்வியால் பலருக்கு கம்பீரத்தை கொடுத்தாய்
கடுமையான உழைப்பால் தலைமகனாய் ஆனாய்
தந்த நிறமனதின் சொந்தம் கொண்ட கோவே
தரம் மிக்க தமிழகத்தை உருவாக்கம் செய்த தேவே
கருந்தங்க மெய்யோடு தரணி வந்த வேந்தே
கவி புனைந்து போற்றுகிறேன் 118ம் பிறந்த நாளில் .
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (15-Jul-20, 5:33 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 40

மேலே