புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 29---

புத்தன் வீட்டுப் பூக்கள் - ௨௯

281. அரசு இயந்திரத்தின் நேர்மை
அடிதட்டு மக்கள் என்றால் வேகமாக இயங்குகிறது
அதிகாரத்தின் மக்கள் என்றால் பழுதாகி நிற்கிறது.

282. நீ தலையாட்டும் பொம்மையாக இருந்தால் மாறிவிடு
எல்லாரும் ஆலோசனை என்ற பெயரில் உன்னை ஆட்டி வைப்பார்கள்.

283. அன்பைக் கொடுத்தவர் அதைத் திரும்ப எடுக்கும் போது
இதயம் அதன் தோலை உரிப்பது போல் துடிக்கும்.

284. வாழ்வதற்காகச் சம்பாதிக்கும் போது இருக்கின்ற நிம்மதி
சம்பாதிப்பதற்காக வாழும் போது நிச்சயம் இருக்காது.

285. நீ மதுபான கடலில் குதித்து உன்னை மறப்பதற்கு
உன் வாழ்க்கை என்ற படகை மூழ்க வைக்கிறாய்.

286. நீ நிதானத்தில் இருக்கும் போதே
உன்னை ஏமாற்ற நினைக்கும் உலகம் இது
அதனால் விழித்துக்கொள் பிழைத்துக்கொள்.

287. பிறர் மீது குற்றம் சொல்லி
தான் செய்த தவறுகளை நியாயப்படுத்தும் மனிதர்கள்
இன்று அதிகம் இருக்கிறார்கள்.

288. விமர்சனங்களைப் பாடமாக நினைத்துப் படித்துக் கொண்டு இருக்காதே
அதைப் படமாகப் பார்த்துக் கடந்து செல்.

289. எதைத் தேடுகிறதோ? யாரைத் தேடுகிறதோ?
மனம் என்ற பறவை சிறகடித்துக் கொண்டே இருக்கும்.

290. யாரைக் காப்பதற்கு யார் வந்தாரோ?
அவரே அவர்களைக் கொல்வதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (19-Jul-20, 8:49 am)
பார்வை : 114

மேலே