தினத்தின் திவ்யா உனக்கு தென்றலனும் நன்றி சொன்னான்

மௌனமாய் மொட்டாய் மலர்கள்
தென்றல் தொட்டும்
மலர்க் கதவம் தாழ் திறவாமல்....
தேன்சிந்தும் புன்னகையுடன்
நீ வந்து திவ்யமாய்ச் சிரித்திட
இமைப்பொழுதில் மலர்களெல்லாம்
மொத்தமாய் இதழ் திறந்து சிரித்திட
கீழ்வானக் கதவம் தாழ் திறந்து
ஆதவனும் தன் பொற்கரத்தால் ஆசிகள் கூற
தினத்தின் திவ்யா உனக்கு
தென்றலனும் நன்றி சொன்னான் !

எழுதியவர் : கவின் சாரலன் (22-Jul-20, 10:34 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 49

மேலே