விலகியே இரு

கண்ணில் நிறைந்த காதலனே
கல்லாய் நிலைத்தாய் இதயத்தில்,
மண்ணும் விண்ணும் உள்ளவரை
மனதில் என்றும் நீதானே,
திண்ணம் தானே மணவாழ்வு
தீண்டல் கொஞ்சம் தவிர்ப்பாயே,
எண்ணிக் கொள்வாய்க் கொடுநோயை
எட்டி யிருப்போம் சிலநாளே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (24-Jul-20, 6:58 pm)
Tanglish : vilakiye iru
பார்வை : 131

மேலே