அவளின்றி ஒரு அணுவும் அசையாது
💞💕💕💞💕💞💕💞💕💞💕
*கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
💕💞💕💞💕💞💕💞💕💞💕
இனியவளே...
நீ பிடிக்கும் குடையில்
கைப்பிடியாக
நான் சேரனும்...
நீ வாசிக்கும் புத்தகத்தில்
வார்த்தையாக
நான் வரனும்..
உன் சிமிக்கியில் மாட்டிக்கொண்டு
என் மனம்
ஊஞ்சல் ஆடுகிறதே....
உன் கை வளையலோடு சேர்ந்து
கவிதை பாடுகிறதே....
உன்னை விட்டு
நீங்காத ஆடையைப் போல்
நான் உன்னை
என்று சேரவேனோ....
உன்னை விட்டு
நீங்காத சுயம் போல்
நான் என்று உன்னோடு
வாழ்வேனோ...
உன் மேனியின் வாசணையை
உன் கைக்குட்டையில் கண்டேனடி...
உன் அழகின் அற்புதங்களை
உன் ஆல்பத்தில் கண்டேனடி....
நதியும் கடலாய்
நாம் கலந்திடனும்..
கையும் ரேகையுமாய்
நாம் சேர்ந்திடனும்....
சுவாசிக்காமல்
நான் வாழ்ந்தாலும்
உன்னை
நேசிக்கால் வாழ முடியாது...
உண்ணாமல் வாழ்ந்தாலும்
உன்னை
எண்ணாமல் வாழ முடியாது....
*கவிதை ரசிகன்*
💕💞💕💞💕💞💕💞💕💞💕