அவளின் மூக்குத்தி பேசுகிறது

அவளின் மூக்குத்தி பேசுகிறது.

தமிழ் செல்வனைக் காதலிக்கும் என் அழகிய தமிழ் செல்வியே!      
நான் கணபதி ஆசாரியால் உருவான ஒற்றை கல் மூக்குத்தி பேசுகிறேன்.
நீ உன் அன்னையுடன் எங்கள் பட்டறைக்கு வந்த போதே உன் அழகில் மயங்கி சொக்கிபோன நான் 
உன் அழகிய மூக்கின் மேல் ஏறி அமர நான் மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
உன் மூக்கை ஆர்ப்பரித்து  அலங்கரிக்க ஆளாய் பறந்து காத்துக் கிடக்கிறேன். 
எப்போது வருவாய்.
இன்று மாலையில் வாயேன்.
வேண்டாம், சற்று இருட்டினாலும் என் ஆசானுக்குக் கண் பார்வையில் தெளிவு இல்லை. 
கன்னியே!
கண்மணியே
கதிரவன் வந்ததும் வா
காலையில் வா
வழி மீது விழி வைத்து
காத்திருக்கிறேன் உனக்காக.
இதோ என் பல நாள் ஆசை நிறைவேறப் போகிறது. 
என் கனவு பலிக்கப்போகிறது
என் ராஜகுமாரி மூக்கில் நான் நட்சத்திரமாக 
ஜொலிக்க போகிறேன்.  
ஆசானே! உன் அனுபவம் முழுவதும் செலுத்தி
என்னை என்னவளுக்குக் கொஞ்சமும் வலிக்காமல்
என்னை அவள் இளம் மூக்கில் அம்சமாகப்  பொருத்திவிடு.
கயில் விழியால்
கண்ணாடியில்
பார்த்து என்னை முதல் முதலாக
அவள் தேன் குழல் விரல்களால் தடவினாள்.
அது அவள் எனக்கு
தந்த முதல் முத்தம்.
அழகுக்கு அழகு சேர்ந்ததால்
அவள் கண்களில் ஆனந்தம்
உடல் மொழியில் ஒரு செருக்கு
உதட்டோரம் ஒரு சின்ன புன்னகை 
நான் பேரழகி என்ற ஓர் ஆணவம் 
எல்லாம் ஒற்றை கல் மூக்குத்தியாகிய என்னால் விளைந்தவை.
தமிழ் செல்வி!
நீ பேரழகி அல்ல
உலக அழகி வரிசையில் 
உனக்கே முதல் இடம்.
அடேய் என்னவளைக் காதலிக்கும் தமிழ்செல்வனே உனக்கு உண்மையில் யோகமடா
இப்படி ஒரு அழகு பெட்டகம் உனக்குக் காதலியாக வாய்த்ததுக்கு.
வானவில்லின் நிறம் அத்தனையும் கண்களில் வைத்து இருந்த அவள்
மின்னும் ஒற்றை கல் மூக்குத்தியால்
தேவதை கூட்டத்துத்  தலைவி ஆகிவிட்டாள்.   
தமிழ் செல்வா!
உன்னை விட நானே பாக்கியசாலி
இதுவரை நீங்கள் இருவரும் 
கண்களால் காதல் மொழி பேசுகிறீர்கள்
நீ இது வரை நீ அவள் கரம் கூட பற்றியது இல்லை. 
ஆனால் நான் உனக்கு முன்னால், அவளைத் தொட்டு, அவள் அழகிய மூக்கை அலங்கரிக்கும் நிரந்தர ஆபரணம் ஆகிவிட்டேன்.
இப்போதெல்லாம் நான் மிகவும் சந்தோஷமாக உள்ளேன்.
காரணம் என்னவளின் சுவாசம் என்னைத் தொட்டுத் தான் செல்ல வேண்டும். 
அவள் மூச்சு அவளுக்கு மட்டும் உயிர் அல்ல
எனக்கும் தான்.
தமிழ் செல்வியே!
உனக்கு மிக்க நன்றி 
நீ குளிக்கும் போது கூட
மற்ற பெண்டிர் போல் என்னை அகற்றுவது இல்லை. 
எனக்குச் சின்ன பயம் சில சமயம் வருவது உண்டு. 
உனக்கு ஜலதோஷம் பிடிக்கும் போது
என்னைக் கழட்டித் தூர எரிந்து விடுவாயோ என்று 
அப்படி நீ ஒரு போதும் செய்தது இல்லை.

தமிழ் செல்வி நீ  இன்று
உன் மூச்சுக் காற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டாய்.
காலதேவன் உன் கணக்கை முடித்து விட்டான்.
அழகியே உன் சுவாதில் சுகமாகப் பயணித்த நானும் அந்த நொடியே இறந்துவிட்டேன். 
இது நாள் வரை உன் மூக்கை அலங்கரித்து நான் வேறு ஒரு மூக்கை அலங்கரிக்க என் மனம் ஒரு போதும் சம்மதிக்காது.
யாரோ ஒருத்தி என்னை உன்னிடம் இருந்து அகற்றுகிறாள்.
இனி என் பயணம் ....???
- பாலு.
    
  
  

எழுதியவர் : பாலு (28-Jul-20, 11:07 pm)
சேர்த்தது : balu
பார்வை : 329

மேலே