அப்பா

பிஞ்சு விரல் பிடித்து,
நஞ்சு நிகர் அற்றாய்..!!
தான் காணா உலகை,
மகன்(ள்) காண ஆசையிட்டாய்..!!
சுமைகள் சுகமென சுமந்து,
வியர்வை தேகமோ மறுத்தாய்..!!
ஏக்கம் சில இருந்தும்,
தூக்கம் பல தொலைத்தாய்..!!
கரம் பிடித்து நடைநடந்து,
நான் கடக்க விடைதந்தாய்..!!
தன்னலம் கருதாத தயவாலனே,
சுயநலம் அற்ற உறவானாய்..!!
நெஞ்சினிலும் தோலினிலும் சுமந்து,
ஈன்றுப்பல தியாகமோ நல்கினாய்..!!
வலிமையில் சிறந்தவன் நீதானே,
வலிமையற்ற என்னிடம் தோற்றாய்..!!
காரணம் இங்கே தேடினேன்,
உன் புன்னகையால் விடைகொடுத்து;

அப்பா என்றாய்!

எழுதியவர் : ஆ.பிரவின் ராஜ் (31-Jul-20, 6:47 am)
சேர்த்தது : பிரவின் ராஜ் ஆ
Tanglish : appa
பார்வை : 3567

மேலே