குழந்தையே தெய்வம்
குழந்தையே தெய்வம்
குழந்தைகள்
கலப்படமில்லா அன்புக்கு
காப்புரிமை பெற்றோராய்!
அவர்களின் நட்பு வானம்
நிறப் பிரிகை
அடைவதில்லை!
அவர்களின் பார்வையில்
சாதியும் மதமும்
அம்மணமாய்!
இனம் தாண்டி
விளையும் பாசத்தின்
உற்பத்தியாளர்கள்!
கடவுளைக் கண் முன்
காட்சிப் படுத்துபவர்கள்
தங்கள் காரியங்களால்! !
சு.உமாதேவி