அவன் தந்த முத்துக்கள்
கட்டியணைத்து எனக்கவன் முத்தம் தந்தான்
முத்தம் தந்த இடம் நனைந்திருக்க
அங்கு ;காயங்கள்; ஏதுமிலை -அதுவே அவன்
முரடனல்லன் மிருதுவானவன் என்று
கூறாமல் கூறி அவன் தந்த முத்தம்
சைவமே சைவம்தான் அசைவுமில்லை
என்றதே என் மனம் குளிர