அழகான காதல் கவிதை
💓❣️💓❣️💓❣️💓❣️💓❣️💓
*கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
💓❣️💓❣️💓❣️💓❣️💓❣️💓
பெண்ணே!
கல்லாய் இருந்த என்னை
சிலையாக்கினாய்...
வார்த்தையாய் இருந்த என்னை
கவிதையாக்கினாய்...
பாலையாய் இருந்த என்னை
சோலையாக்கினாய்...
காய்யாய் இருந்த என்னை
கனியாக்கினாய்...
இருளாய் இருந்த என்னை
வெளிச்சமாக்கினாய்..
அலங்கோலமாய் இருந்த என்னை
அழகு படுத்தினாய்...
மிருகமாய் இருந்த என்னை
மனிதனாக்கினாய்.....
உன் உறவு
கிடைத்தப் பிறகு இறைவனிடம்
நான் எந்த வரமும் கேட்டதில்லை...
இதை விடப் பெரிய வரம்
என்ன இருந்து விடப்போகிறது..?
*கவிதை ரசிகன்*
💓❣️💓❣️💓❣️💓❣️💓❣️💓