கலி காலம்

சாக்கடையில் மூக்கடைத்து பூக்கடையாய் ஆக்கிடவே போக்கிழந்து போய்விடாது தூரமென நீங்கிடவும் நினைப்பதுவே நிம்மதியாம்!

முட்களெல்லாம் மட்கிடவே
நுட்பமதை நட்புடனே
முட்படவே முயன்றுவிடில்
முட்டாளென முனகுதற்கு
உட்படவே ஆட்படாது
செருப்பணிந்து கடப்பதுவே
சிறப்புடைய செயலாகும்!

இருட்டறையில் இருப்பதையே இன்பமென நம்பியோர்க்கு
ஒளிகொடுக்கும் தெளிவுடனே
வழிவகுத்து அழிந்திடாமல்
பொருத்தமான இடத்தைநோக்கி
வருந்திடாமல் விரைந்திடுவாய்!

எழுதியவர் : கார்த்திகேயன் திருநாவுக் (6-Aug-20, 12:00 pm)
பார்வை : 29

மேலே