அரசியல் 2

கவிதைமணி தந்த தலைப்பு
" அரசியல் " 2
கவிதைமணி நன்றி
○○○

ஆயிரம் கட்சிகள் பிறந்தாலும்
மறைந்தாலும் ஒற்றுமையாய்
ஒருவர் பேச்சை ஒருவர் கேட்டு
ஒலிவு மறைவின்றி பளிச்சிட்டு
மக்களுக்காகவே நாங்கள் என்ற
இணக்கம் கொள்ளளே அரசியல்

மக்களைச் சார்ந்தது மக்களைப் போய்
சேர்ந்திடச் செய்தலே அரசியல்
உள்ளொன்று வைத்து புறமொன்று
பேசுதல் இல்லாதிருத்தல் அரசியல்
கொடுப்பதொன்றை மறைப்பது
இரண்டை ஆகாது என்றுமரசியல்

உள்ளுக்குள்ளே குத்தல் குடைச்சல்
அதற்கு பெயரில்லை அரசியல்
இடத்திற்கு இடம் நிறம் மாறும் பச்சோந்து போலில்லை அரசியல்

வேளாங்கண்ணி சகாய மேரி
அரியலூர் திருக்கை

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (6-Aug-20, 1:03 pm)
பார்வை : 20

மேலே