பறவை

கவிதைமணி தந்த தலைப்பு
" பறவை "
கவிதைமணி நன்றி
○○○

பறவைகளே பதில் சொல்லுங்கள்
நீங்கள் எல்லோரும் ||

தங்களின் சுய சுதந்திரத்தில் மகிழ் கிறவர்கள் ஆனால் ||

நாங்கள் அப்படியில்லையே அதுதான்
ஏனென்று தெரியவில்லை ||

எங்களுக்கு பூமியில் மட்டுமே புழங்க
அனுமதி உங்களுக்கு ||

வானம் பூமி இரண்டிலும் புழங்க முழங்க இயங்க ஆண்டவன் அருளச் ||

செய்துள்ளானே அப்படி என்ன உறவு
உங்களுக்கும் அவனுக்கும் ||

சிறைப் பறவை ஒன்று மனம் உடைந்து
சுதந்திர பறவையிடம் ||

உங்கள் சுதந்திர ரகசியத்தை எம்ம
வர்க்கு சொல்லிக் ||

கொடுக்க மாட்டீரோ மனதிறங்கியே
மானிடர் எம்மவர்க்கு ||

அலகொடிந்தாலும் காலொடிந்தாலும்
சிறகொடியாது ||

இருந்தாலேப் போதுமே உன்னினம் மனமொடியாது எஞ்சிய ||

காலங்களை கஞ்சி காய்ச்சி குடித்து
ஓட்டிவிட முடிகிறது ||

இதுவரை நாங்கள் மொழி பேசி ஒரு
சிறு சுகத்தை காணோம் ||

இனிமேல் நீங்கள் மொழி பேசும் காலம்
வர பரிந்துரை செய்வோம் ||

உங்கள் சுய சுதந்திரம் எங்களைச் சேர
மகிழ்ச்சியாக வாழ்வோம் ||

ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (6-Aug-20, 1:05 pm)
Tanglish : paravai
பார்வை : 17

மேலே