பறவை
கவிதைமணி தந்த தலைப்பு
" பறவை "
கவிதைமணி நன்றி
○○○
பறவைகளே பதில் சொல்லுங்கள்
நீங்கள் எல்லோரும் ||
தங்களின் சுய சுதந்திரத்தில் மகிழ் கிறவர்கள் ஆனால் ||
நாங்கள் அப்படியில்லையே அதுதான்
ஏனென்று தெரியவில்லை ||
எங்களுக்கு பூமியில் மட்டுமே புழங்க
அனுமதி உங்களுக்கு ||
வானம் பூமி இரண்டிலும் புழங்க முழங்க இயங்க ஆண்டவன் அருளச் ||
செய்துள்ளானே அப்படி என்ன உறவு
உங்களுக்கும் அவனுக்கும் ||
சிறைப் பறவை ஒன்று மனம் உடைந்து
சுதந்திர பறவையிடம் ||
உங்கள் சுதந்திர ரகசியத்தை எம்ம
வர்க்கு சொல்லிக் ||
கொடுக்க மாட்டீரோ மனதிறங்கியே
மானிடர் எம்மவர்க்கு ||
அலகொடிந்தாலும் காலொடிந்தாலும்
சிறகொடியாது ||
இருந்தாலேப் போதுமே உன்னினம் மனமொடியாது எஞ்சிய ||
காலங்களை கஞ்சி காய்ச்சி குடித்து
ஓட்டிவிட முடிகிறது ||
இதுவரை நாங்கள் மொழி பேசி ஒரு
சிறு சுகத்தை காணோம் ||
இனிமேல் நீங்கள் மொழி பேசும் காலம்
வர பரிந்துரை செய்வோம் ||
உங்கள் சுய சுதந்திரம் எங்களைச் சேர
மகிழ்ச்சியாக வாழ்வோம் ||
□
ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்