தீபம்

கவிதைமணி தந்த தலைப்பு
" தீபம் "
கவிதைமணி நன்றி
○○○

பஞ்சித் திரியதில் எரியும் தீபம் நீ நடக்கும் பாதைக்கு வெளிச்சம் தரும்
நெஞ்சில் எரியும் கருணை தீபமுன்
வாழும் வாழ்வுக்கு வெளிச்சம் தரும்

கஞ்சிக்காக எரிந்து பசியாற்றும் தீபமுன்
பசித்தீர்க்கும் நித்திரைக்கு முத்திரை
வஞ்சகம் எனும் தீபம் எரிந்து நாசமாகும்
மோசமான நிலமையை நிலுவையில்

நிறுத்தியதனில் கோபம் கொள்ளவும்
தெரியும்; அனுதாபம் காட்டவும் தெரியும்
லாபம் ஈட்டித்தர வழி காட்டித்தரவல்லது சாபமிடாது தூபங்காட்டும் ரூபமானது

நாதீபம் தீவில்தீபம் மேகதீபம் ஆகாய
தீபம் கற்ப்பூரதீபம் சத்தியதீபம் சாத்திய
தீபம் கார்த்திகைதீபம் அணையாதீபம் ஆயிரம் தீபமென எரியும் நம்நடுவிலே
@....
சகாய மேரி வேளாங்கண்ணி
அரியலூர் திருக்கை

எழுதியவர் : (6-Aug-20, 1:37 pm)
பார்வை : 63

மேலே