அப்பாவின் நாற்காலி
கவிதைமணி தந்த தலைப்பு
" அப்பாவின் நாற்காலி "
கவிதைமணி நன்றி
○○○
கோடிக் கோடியாய் விரையம் செய்து வந்த தில்லை அப்பாவின் நாற்காலி
அன்பையும் ஆதரவையும் அர்பணித்து
வந்ததிந்த அரிய அப்பாவின் நாற்காலி
கோடிக்கு பலத்தோல்வி காத்திருக்கும்
அன்புக்கென்றும் வெற்றி பூத்திருக்கும்
பணங்கொடுத்து பதவி வாங்கலாமது
நிலைக்கு மென்று சொல்லமுடியாது
பாசத்தை பொழிய மக்களே சேரலாமது
நிலைக்கா தென சொல்ல முடியாது
செத்துப்போன மரம் மரியாதை தரும்
கம்பீரமாக அப்பாவின் நாற்காலி க்கு
உயிர்கள் உதாசீனம் படுத்துகிறது
அதில் அமர்ந்து கொண்டிருக்கும்
அர்த்தமற்றோரை; இங்கு அப்பாவின்
நாற்காலி சீதோஷ்ண நிலையற்றது
□
சகாய மேரி
வேளாங்கண்ணி
அரியலூர் திருக்கை