நான் தான் சாரதி
ஊரில் தேர் திருவிழா
ஊரே கூடி நின்று
தேர் வடம் இழுக்க...! !
யாருக்கும் தெரியாமல்
என் காதலியின் கையை
நான் வடம் பிடிக்க...! !
பிடிக்க வருவோரை
பிடிக்க விடாமல்
துள்ளிக்குதித்து ஓடும்
கன்றுக்குட்டி போல்
அவள் தாவி செல்ல...
பிறகு என்னருகில்
நெருங்கி வந்து
உன்னுடன் பேசி மகிழ
எனக்கும் ஆசை தான்...! !
ஆனால்...
யாராவது..! !
பார்த்துவிட்டால்
என்னாவது என்று
எனக்கொரு பயம்
என்றாள்...! !
நாம் யாருக்கும்
பயப்பட வேண்டாம்
ஊர் மக்களுக்கு
உரக்க சொல்வோம்
நம் இரு வீட்டாரின்
அனுமதியோடு...
இந்த "எழில் தேருக்கு"
நான் தான் சாரதி என்று...! !
--கோவை சுபா