சிறந்த காதல் கவிதை

இனியவளே!
நிலா அழகாயிருக்கும்
ஆனால்
உன்னை போல்
அன்பாயிருக்குமா?

மலரெல்லாம்
பொழிலாகஇருக்கும்
ஆனால்
உன்னை போல்
பொறுப்பாயிருக்குமா...?

குயிலுக்கெல்லாம் பாடத் தெரியும்
ஆனால்
உன்னை போல்
குடும்ப நடத்த தெரியுமா...?

மயிலுக்கெல்லாம் ஆடத்தெரியும்
ஆனால்
உன்னை போல்
நான்கு வார்த்தை பேசத் தெரியுமா?

சிலையெல்லாம்
கட்டழகோடு இருக்கும்
ஆனால்
உன்னை போல்
கற்போடு இருக்குமா?

கிளியெல்லாம்
அருமையாக இருக்கும்
உன்னை போல்
யாருக்கும் அடிமையாகமல் இருக்குமா?

சித்திரமெல்லாம்
ரசிக்கும்படி இருக்கும்
ஆனால்
உன்னை போல்
சளிப்புத்தராமல் இருக்குமா...?

அன்னமெல்லாம்
நளினமாக நட்க்கும்
ஆனால்
உன்னை போல்
நாகரீகமாக நடக்கத் தெரியுமா...?

கவிதை ரசிகன்

எழுதியவர் : கவிதை ரசிகன் (7-Aug-20, 9:18 pm)
பார்வை : 75

மேலே