பொருட்பயன்

எருக்கம் பூக்களிலும்
ஊமத்தம் பூக்களிலும் கூட
தேனிருப்பது
தெரிந்தே இருக்கிறது
பாடித்திரியும் வண்டுகளுக்கும்
பறந்து திரியும் பட்டாம்பூச்சிகளுக்கும்.
எல்லாப் பொருளும்
பயன்குறித்தனவே என
சொல்லாமல் சொல்கின்றனவோ
நம்மிடம் இவை.

- தீ..கோ.நாராயணசாமி

எழுதியவர் : தீ.கோ.நாராயணசாமி (9-Aug-20, 12:52 am)
சேர்த்தது : தீ கோ நாராயணசாமி
பார்வை : 40

மேலே