அம்மா கவிதை
🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸
*அம்மா கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸
அம்மா!
உனக்காக
நீ அழுததை விட
எனக்காக
அழுததுதான் அதிகம்...
நீ உண்டு
மகிழ்ந்ததை விட
நான் உண்பதைக் கண்டு
மகிழ்ந்ததுதான் அதிகம்...
உனக்காக
நீ தூங்கிய நாட்களை விட
எனக்காக
நீ விழித்திருந்த
நாட்களே! அதிகம்....
நீ ஆசைப்பட்டதை
வாங்கியதை விட
நான் ஆசைப்பட்டதை
வாங்கியதே அதிகம்....
வாழ்க்கையில
தியாகம் செய்வார்கள்...
நீ மட்டும் தான்
வாழ்க்கையையே!
தியாகம் செய்கிறாய் ..!
💐💐💐💐💐💐💐💐💐💐💐
கருப்பாக இருந்தாலும்
கருப்பு வைரம் என்று
தாலாட்டி....
ஊனமாக இருந்தாலும்
நீ ஞானம் பெறுவாய் என்று
சீராட்டி...
அழகில்லை என்றாலும்
திருஸ்டிப்பெட்டு வைத்து
பாலூட்டி....
எப்படியிருந்தாலும்
அப்படியே!
ஏற்றுக்கொண்டு நேசிக்க
அம்மா!
உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது.......?
💐💐💐💐💐💐💐💐💐💐💐
மகனே!
நான்
முதியோர் இல்லத்தில்
நிம்மதியில்லாமல்தான்
இருக்கிறேன்...
என்னை
முதியோர் இல்லத்தில்
சேர்த்து விட்டாயே! என்றல்ல...
என்னை
முதியோர் இல்லத்தில்
சேர்ததப் பிறகாவது
நீ
நிம்மதியாக
இருக்கிறாயா என்றுதான்....
*கவிதை ரசிகன்*
🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸