சாப்பிடும்போது
ஒருவர் தன் மகனோடு
வீட்டில் சாப்பிட்டுக்
கொண்டிருந்தார்
சாப்பிடும்போது—மகன்
அப்பா, அப்பாவென
அழைத்தான்
தந்தை கோபமுற்று
சாப்பிடும்போது பேசாதே என
எத்தனை தடவை சொல்வது
அறிவு இருக்காவென
மகனை திட்டி அவன்
வாயை அடைத்தார்
சாப்பிட்டு முடித்து
ஓரிடத்தில் தந்தை
வந்தமர்ந்தார்,
பையனை பார்த்து
“ஏதோ சொல்ல வந்தாயே
என்ன விஷயம்டா” என்றார்
“அதை இப்போ சொல்வதால்
ஒரு பயனுமில்லை—நீங்க
சாப்பிடும்போது
சாம்பாரில் இரண்டு
கரப்பான் பூச்சிகள்
கிடந்தன “ என்றான்