தலைகுனிவு

தலையில் அடித்துக் கொண்டே முனுமுனுத்தபடி இருந்தாள் குமரனின் மனைவி உமா.அலுவலகம் கிளம்பும் அவசரம் குமரனுக்கு.தன் வயதான தாய் வீட்டில் இருப்பது அவனுடைய மனைவிக்கு எரிச்சல்.""எங்க அண்ணன் நிம்மதியா வெளிநாட்டுல இருக்கான்.என் தலையெழுத்து உன்னோட பாடுபடனும்"" என்று கத்திவிட்டு குமரன் அலுவலகம் சென்றான்.
இன்று பணி ஓய்வு பெறும் சி.இ.ஓ. அவர்களுக்கு சிறு பிரிவு-நிகழ்ச்சி இருந்தது.அதில் அவர் ""தன் முன்னேற்றத்திற்கு தன் தாயே காரணம் என்றும், தனி ஒருவராகத் தாய் இருந்து தன்னை வளர்க்கப் பாடுபட்டதைச் சொன்னார். வீல் சேரில் அவரை அழைத்து வந்தனர்.அலுவலக ஊழியர்கள் எல்லோரும் சென்று அந்தத் தாயின் காலில் விழுந்து வணங்கினர்.குமரன் செய்வதறியாது வெட்கி நின்றான்.

எழுதியவர் : சுதா சேஷாத்திரி (20-Aug-20, 8:51 pm)
சேர்த்தது : Sudhaseshadri
பார்வை : 195

மேலே